- ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
- அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
- *****
- அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
- பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
- இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
- *****
- சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
- தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
- *****
- இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
- இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
- பகலை பூமியில் தொலைத்துவிட்டு
- இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
- சின்னச் சின்னக் கனவுகளை
- சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
- தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
- வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
- *****
- அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
- மூட நம்பிக்கை முளைக்கிறது.
- *****
- எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
- அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
- அல்லது,
- எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
- அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
- *****
- காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
- எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
- காரணம் -
- வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
- *****
- தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
- *****
- வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
- வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
- காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
- காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
- காதல் மனிதனின் வரமல்லவா?
- கவிதை மொழியின் உரமல்லவா?
- *****
- சப்தம் கடந்த சங்கீதம் காண
- வார்த்தை கடந்த கவிதைத்தேட
- வர்ணம் கடந்த ஓவியம் பேண
- மனசை ஆற்றுப்படுத்துங்கள்
Home
»
vairamuththu kavithai
» vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்
Related Posts
காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள்,காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai, காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai,
01 Jul 20150கா தலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்த...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை இலை ,கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
23 Jul 20140இலை; ! இன்றோ... நாளையோ... இப்போதோ... பிறகோ... விழுந்து விடுவேன் உயிரின் கடைசி இழையில் ஊசல...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வழிப்போக்கன், நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
23 Jul 20140வழிப்போக்கன்; ! உங்கள் பூக்களை வண்டுகளுக்கு முன்பே வாசித்தவர் எங்கே சோலைகளே தேயிலைக் கொழுந்...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை மெழுகுவத்தி,மழைப் பிரசங்கம்
23 Jul 20140மெழுகுவத்தி; ! தனக்காக அல்ல... தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனி...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் ,அந்தந்த வயதுகளில்.
23 Jul 20140உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்! உன் பார்வை கொஞ்சம் வில...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.