- காற்றை நுரைக்க வைக்கிறாய்
- காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
- வெறுமை நிரப்புகிறாய்
- மாயைக்குள் மெய்யாகிறாய்
- கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
- மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
- தாவரங்களின் தலை கோதுகிறாய்
- மேகங்கள் பீச்சுகிறாய்
- மூங்கிலில் வண்டு செய்த
- புண்ணில் பண்ணிசைக்கிறாய்
- பிறையை வளர்ப்பிக்கிறாய்
- விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்
- எங்கள்
- மனப்பாறை இடுக்குகளில்
- தேன்கூடு கட்டுகிறாய்
- உன் வருகைக்கு எங்கள்
- கண்ணிமைகள் தாழ்ந்து
- கம்பளம் விரிக்க
- கண்ணீர் ஆங்காங்கே
- திரவமலர் தெளிக்க
- புல்லரிக்கும் உரோமங்கள்
- எழுந்து நின்று வரவேற்க
- உனக்குத்தான் எத்தனை
- ராஜமரியாதை இசையே!
- * * * * *
- நாவுக்குச் சிக்காத அமிர்தம்
- நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
- கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
- ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
- நீயே சொல் இசையே
- செவியே போதுமா?
- நான்கு புலன் உபரியா?
- மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
- பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
- மாறுவேடம் போட்டபடி
- நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
- * * * * *
- நதி -
- நடந்துபோகும் சங்கீதம்
- மழை -
- அவரோகண சங்கீதம்
- மழலை -
- பிழைகளின் சங்கீதம்
- மெளனம் கூட
- உறைந்துபோன சங்கீதம்
- பூமி சுற்றிக் காற்று
- காற்று சுற்றி இசை
- இசைக்குள் மிதக்குகம்
- ஜீவராசிகள்
- * * * * *
- இசையே!
- தூங்கவை எங்களை
- உன் மயிற்பீலி விரல்கொண்டு
- மனசு தடவு
- இரத்தக் குழாய்களின்
- துருக்கள் துலக்கு
- உள்ளிருக்கும் விலங்குத்தோல்
- உரி
- மென்குணங்கள் மேம்படுத்து
- நாங்கள்
- இறுகி இறுகிக்
- கல்லாகும்போது
- இளகவிடு
- குழைந்து குழைந்து
- கூழாகும்போது
- இறுகவிடு
- நீயில்லாத பூமி
- மயானம்
- மன்னித்துவிடு
- மயானத்திலும் இசை உண்டே.
Related Posts
காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள்,காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai, காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai,
01 Jul 20150கா தலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்த...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை இலை ,கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
23 Jul 20140இலை; ! இன்றோ... நாளையோ... இப்போதோ... பிறகோ... விழுந்து விடுவேன் உயிரின் கடைசி இழையில் ஊசல...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வழிப்போக்கன், நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
23 Jul 20140வழிப்போக்கன்; ! உங்கள் பூக்களை வண்டுகளுக்கு முன்பே வாசித்தவர் எங்கே சோலைகளே தேயிலைக் கொழுந்...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை மெழுகுவத்தி,மழைப் பிரசங்கம்
23 Jul 20140மெழுகுவத்தி; ! தனக்காக அல்ல... தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனி...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் ,அந்தந்த வயதுகளில்.
23 Jul 20140உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்! உன் பார்வை கொஞ்சம் வில...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.